Sunday, 15 July 2012


டியர் ப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். சென்ற பதிவில் ஓவியர் ப்ராங் மில்லரைப்பற்றி கூறியிருந்தேன். ஆனால் அவருடைய போட்டோவை பதிவில் போட மறந்துவிட்டேன். இந்த பதிவும் ஓவியர் ப்ராங் மில்லரைப் பற்றியதுதான். அவருடைய 300 காமிக்ஸும், 300 திரைப்படம் பற்றியும்தான். தமிழில் 300 பருத்தி வீரர்கள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. முதலில் இப்போது ஓவியர் ப்ராங் மில்லரின் ஓவியமும், அவரது போட்டோவும்.

 

300 திரைப்படத்தைப் பற்றி : இந்த கதை நடக்கும் வருடம் 480 B.C.. இந்த கதை ஒரு சரித்திர நிகழ்வை பின் புலமாக கொண்ட கதை. கிரேக்கத்தை சேர்ந்த 300 ஸ்பார்டன் வீரர்கள், 1,70,000 பெர்ஷியர்கள் ஸ்பார்டன் மீது படையெடுத்து வந்த போது, 300 வீரர்கள் மட்டுமே கொண்ட ஸ்பார்டன் படை பெர்ஷியன் படையோடு மோதி தடுத்து நிறுத்துகின்றது. கடைசியில் ஸ்பார்டன் ஊரை சேர்ந்த ஒரு தனி மனிதனின் துரேகத்தால் 300 பேர்களுமே பேரில் இறக்கின்றார்கள். இந்த 300 கதை முதலிலேயே ப்ராங் மில்லரால் காமிக்ஸாக வரையப்பட்டது. பிறகு படமாக்கப்பட்டது. மில்லரே இந்த கதையின் எழுத்தாளர், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. இத் திரைப்படம் 09.03.2007 -ல் வெளியானது. இந்த வலைப்பக்கத்திற்கு முதல் முறையாக வரும் நண்பர்கள், ப்திவை படிக்கும் முன் இதற்கு முந்தய பதிவைப் படித்த பின் இந்த பதிவை படிக்கவும். 

இனி 300 காமிக்ஸ் எப்படி திரைப்படமாக உருவாக்கப் பட்டிருக்கின்றது என்பதை பார்ப்போம். இந்தப் படமும் சின் சிட்டியைப் போல காமிக்ஸிலிருந்து திரைப்பட அவதாரம் எடுத்திருந்தாலும், 300 திரைப்படத்தில் காமிக்ஸ் புத்தக காட்சிகளின் சாயல் இருக்குமே தவிர, காமிக்ஸ் புத்தகத்தின்  சாயல் இருக்காது.

300 திரைப்படத்தை காமிக்ஸோடு ஒப்பிடும் சில காட்சிகள்.















  





நண்பர்களே, இப்போது இந்த பதிவின் இறுதி பாகத்தை நெருங்கி விட்டோம். சென்ற பதிவின் நீளம் காரணமாக அங்கு பதிவிடாத சில ப்ராங் மில்லரின் ஓவியங்களை போனசாக இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

அமேசிங் ஸ்பைடர் மேனும் டேர் டெவிலும்

அமேசிங் ஸ்பைடர் மேனும், டேர் டெவிலும்.




அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். அதற்கு முன், உங்கள் கமெண்டுகளை இடுங்கள். இந்த முறை யார் முதலில் வருகின்றார்கள் என்று பார்ப்போம். என் பெயர் லார்கோ பதிவில் கமெண்ட் ரேசில் முதலில் வந்த திரு P. கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய பரிசை அவரிடம் சேர்த்தாயிற்று.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.